செய்திகள்

மானாமதுரை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2017-04-19 15:55 IST   |   Update On 2017-04-19 15:55:00 IST
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை:

மானாமதுரை தாலுகா கேப்பர் பட்டணம் பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி கலைச்செல்வி. இவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், தனக்கும், செபஸ்தியார் பட்டணத்தைச் சேர்ந்த இக்னோபால் வினோத் (வயது 29) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம், வரதட்சணையாக வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 3 மாதத்தில் பெற்றோர் வீடு திரும்பினேன்.

அதன் பிறகு சேர்ந்து வாழ பேசியபோது, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமிர்தம் விசாரணை நடத்தி இக்னோபால் வினோத், அவரது தந்தை மோட்ச ஆனந்தம், தாய் சந்தியாகு அம்மாள், சகோதரி சுசீலா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Similar News