செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் இன்று கார் மோதி பெண் பலி

Published On 2017-04-05 19:39 IST   |   Update On 2017-04-05 19:39:00 IST
கந்தர்வக்கோட்டையில் இன்று சாலையை கடந்த பெண் மீது கார் மோதியது.இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வெள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த  மாணிக்கம் மனைவி வசந்தா (வயது 45). இவர் இன்று காலை  வீட்டில் உள்ள குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவதற்காக  ,  அப்பகுதியில் உள்ள சாலையை கடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த கார்,  வசந்தா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள்மீட்டு கந்தர்வக்கோட்டை  அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  வசந்தா இறந்தார்.

இது குறித்து  கந்தர்வக்கோட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News