செய்திகள்
மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கற்பழிப்பு
சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மர்மநபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:
சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மர்மநபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாநிலம் மாமல்லபுரம் பகுதி நாட்டின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவர். இந்நிலையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 39 வயதான இளம்பெண் ஒருவர் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் இன்று மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டார். தனியாக இருந்த போது அங்கு வந்த மர்மநபர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மறைவிடத்தில் வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், தனக்கு நேர்ந்த இந்த கொடூர நிகழ்வு குறித்து அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை பகுதியில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சந்தேகப்படும் படியான நபர்களை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி மற்றும் சரக டி.ஐ.ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.
சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மர்மநபர்களால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாநிலம் மாமல்லபுரம் பகுதி நாட்டின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவர். இந்நிலையில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 39 வயதான இளம்பெண் ஒருவர் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் இன்று மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டார். தனியாக இருந்த போது அங்கு வந்த மர்மநபர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மறைவிடத்தில் வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், தனக்கு நேர்ந்த இந்த கொடூர நிகழ்வு குறித்து அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரை பகுதியில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சந்தேகப்படும் படியான நபர்களை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி மற்றும் சரக டி.ஐ.ஜி ஆகியோர் பார்வையிட்டனர்.