செய்திகள்

காரைக்குடி அருகே வங்கி பெண் ஊழியர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

Published On 2017-03-24 17:20 IST   |   Update On 2017-03-24 17:20:00 IST
காரைக்குடி அருகே வங்கி பெண் ஊழியர் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள புதுவலசையை சேர்ந்தவர் ராமையா. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வழக்கம் போல் ஐஸ்வர்யா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ராமையா சாக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Similar News