செய்திகள்
தாயமங்கலத்தில் கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
தாயமங்கலத்தில் கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
திண்டுக்கல் கே.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் ஹரிபாபு (வயது36). இவரது தம்பி சுப்பிரமணி (30), ஆட்டோ டிரைவர்.
நேற்று சுப்பிரமணி தனது குடும்பத்தினருடன் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
நேற்று மாலை சுப்பிரமணி கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் சுப்பிரமணி தண்ணீ ரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடம் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஹரிபாபு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.