செய்திகள்
சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்து: பாதிரியார் பலி
சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதிரியார் பரிதாபமாக இறந்தார். வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் மேலூர் ரோட்டில் மறை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பங்கு தந்தையாக சென்னையை சேர்ந்த சேவியர் ஜெயசீலன் (வயது47) என்பவர் இருந்தார்.
நேற்று பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சேவியர் ஜெயசீலன் வெளியில் சென்றிருந்தார். இரவு நேரத்தில் மறை மாவட்ட அலுவலகத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மேலூர் ரோட்டில் சென்ற போது கொட்டக்குடியை சேர்ந்த மலைராஜ் என்பவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார். இதில் நிலைதடுமாறிய சேவியர் ஜெயசீலனின் மோட்டார் சைக்கிள் மலைராஜ் மீது மோதியது.
இந்த விபத்தில் சேவியர் ஜெயசீலனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மலைராஜ் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை நகர் மேலூர் ரோட்டில் மறை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பங்கு தந்தையாக சென்னையை சேர்ந்த சேவியர் ஜெயசீலன் (வயது47) என்பவர் இருந்தார்.
நேற்று பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சேவியர் ஜெயசீலன் வெளியில் சென்றிருந்தார். இரவு நேரத்தில் மறை மாவட்ட அலுவலகத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மேலூர் ரோட்டில் சென்ற போது கொட்டக்குடியை சேர்ந்த மலைராஜ் என்பவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார். இதில் நிலைதடுமாறிய சேவியர் ஜெயசீலனின் மோட்டார் சைக்கிள் மலைராஜ் மீது மோதியது.
இந்த விபத்தில் சேவியர் ஜெயசீலனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மலைராஜ் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.