செய்திகள்

தேவகோட்டை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் துன்புறுத்தல்

Published On 2017-02-28 15:53 IST   |   Update On 2017-02-28 15:53:00 IST
தேவகோட்டை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, வேப்பங்குளத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணன் (27) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 25 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கனிமொழி, தேவகோட்டை மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், தொழில் தொடங்க கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சரவணன் துன்புறுத்துவதாகவும், இதற்கு அவரது பெற்றோர் மாயழகு-பராசக்தி, உறவினர் தெய்வானை ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி விசாரணை நடத்தி சரவணன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

Similar News