செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த கோரி காஞ்சீபுரத்தில் மனிதசங்கிலி போராட்டம்

Published On 2017-01-13 12:36 IST   |   Update On 2017-01-13 12:36:00 IST
ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கச்சபேஸ்வரர் கோவில் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம்:

ஜல்லிகட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கச்சபேஸ்வரர் கோவில் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் பொது மக்கள், வியாபாரிகள், மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, ‘ஜல்லிக் கட்டு என்பது மிருக வதை அல்ல. உழவுத் தொழிலுக்கு பயன்படும் மாடுகளை போற்றி பாதுகாக்கும் தமிழர்கள் அவற்றினை துன்புறுத்துவதாக கூறுவது தவறு. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டின் அடையாளம்.

ஜல்லிக்கட்டை மிருக வதை சட்டத்தில் இருந்து நீக்கி தமிழகத்தின் பண்பாட்டையும் வீரத்தையும் காக்கும் வகையில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களின் மீதான மறைமுக தாக்குதலை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News