செய்திகள்

நாகை அருகே பஸ் மோதி தொண்டு நிறுவன ஊழியர் பலி

Published On 2017-01-11 14:54 IST   |   Update On 2017-01-11 14:54:00 IST
நாகை அருகே பஸ் மோதி தொண்டு நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

கேரளாவை சேர்ந்தவர் பாபு (45). இவர் நாகை மாவட்டம் கீழையூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து கீழையூர் வந்து கொண்டிருந்தார். கீழையூர் அருகே உள்ள காரை நகர் பகுதியில் சென்று போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த பாபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News