செய்திகள்
பயிர்கள் கருகியதால் பெண் விவசாயி உள்பட 2 பேர் பலி
வேதாரண்யம் பகுதியில் பயிர் கருகியதால் பெண் விவசாயி உள்பட 2 பேர் மாரடைப்பால் இறந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி பொட்டு அம்மாள் (62).இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார்.
போதிய மழை இல்லாததால் இவர் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் மனவேதனையில் இருந்தார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
இதேபோல், வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன் புலம் 3-ம் சேத்தி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (65). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் நேரடி சம்பா சாகுபடி செய்திருந்தார். பயிர்கள் கருகிய வேதனையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
இவருக்கு சசிகலா என்ற மனைவியும் செந்தில், கண்ணன் என்ற மகளும் பிரியா என்ற மகளும் உள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் பயிர் கருகியதால் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி பொட்டு அம்மாள் (62).இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார்.
போதிய மழை இல்லாததால் இவர் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் மனவேதனையில் இருந்தார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
இதேபோல், வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன் புலம் 3-ம் சேத்தி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (65). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் நேரடி சம்பா சாகுபடி செய்திருந்தார். பயிர்கள் கருகிய வேதனையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
இவருக்கு சசிகலா என்ற மனைவியும் செந்தில், கண்ணன் என்ற மகளும் பிரியா என்ற மகளும் உள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் பயிர் கருகியதால் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.