செய்திகள்

சேலம் அருகே மரம் விழுந்து கூலிதொழிலாளி பலி

Published On 2017-01-09 18:55 IST   |   Update On 2017-01-09 18:55:00 IST
சேலம் அருகே மரம் விழுந்து கூலிதொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் பற்றி காரிப்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் அருகே உள்ள வலசையூரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 34). கூலி தொழிலாளி.

இவர் இன்று காலை காரிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு மரம் வெட்ட சென்றார். பின்னர் இவரும், மற்ற தொழிலாளர்கள் சிலரும் மரம் வெட்டினர். அப்போது மரக்கிளை ஒன்று மாணிக்கம் மீது விழுந்து விட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே மாணிக்கத்தை மற்ற தொழிலாளர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முயன்றனர். ஆனால் அவர் அதற்குள் இறந்து விட்டார்.

பின்னர் இது பற்றி காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனே வந்து மாணிக்கத்தின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

Similar News