செய்திகள்

காஞ்சீபுரத்தில் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றம்

Published On 2017-01-09 14:44 IST   |   Update On 2017-01-09 14:44:00 IST
காஞ்சீபுரம் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புதிய மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசினார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘நீதிமன்றத்தையோ, நீதிப் பணியையோ யாரும் சொந்தம் பாராட்டாமல், பொது சேவையாக கருதி அனைத்து பொது மக்களுக்கும் உதவிடும் வகையில் பணியாற்ற வேண்டும். விரைவில் தமிழகம் முழுவதும் புதிய நீதிமன்றங்கள் உருவாக உள்ளது. இதனால் தேக்கம் அடைந்துள்ள ஏராளமான வழக்குகள் நிறைவுபெரும்’ என்றார்.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி ஆர்.செல்வகுமார், மாவட்ட நீதிபதி-2 ஜி.கருணாநிதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜா.முத்தரசி, வழக்கறிஞர் சங்க தலைவர்கள் அப்துல் ஹக்கீம், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News