செய்திகள்

தந்தை திட்டியதால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-01-06 23:10 IST   |   Update On 2017-01-06 23:10:00 IST
நாகை மாவட்டம் கீவளூர் அருகே வேலைக்கு போகாமல் இருந்த மகனை தந்தை திட்டியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீவளூர் அருகே உள்ள புதுச்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜதுரை (22). இவர் கடந்த 2 வருடமாக திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

பின்னர் சொந்த ஊர் வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ராஜதுரை உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் உடல் கருகிய அவர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கீவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அமுதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News