செய்திகள்
வேளாங்கண்ணியில் 9 மாத பெண் குழந்தை கடத்தல்
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த தம்பதியின் 9 மாத குழந்தை மர்ம கும்பலால் கடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் மினிசகாயப் புரத்தை சேர்ந்தவர்கள் ஜெரோம், சுகன்யா. இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் வேளாங்கண்ணிக்கு குழந்தையுடன் தரிசனத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேளாங்கண்ணி பேராலயம் மாதாக்குளம் அருகில் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து அவர்கள் நாகை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை குறித்து தகவல் தெரிந்தால் உடன் தெரிவிக்குமாறு வேளாங்கண்ணி போலீசார் தெரிவித்துள்ளனர்.