செய்திகள்
வேதாரண்யத்தில் லாரி டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
வேதாரண்யத்தில் லாரி டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியிலிருந்து லாரி ஓட்டி வந்த மகாமணி (42) என்பவர் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு அதில் அமர்ந்திருந்தாராம்.
அப்போது அங்கு வந்த கீழஆறுமுகக்கட்டளை பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் குணசேகரன், நாகத்தோப்பு சேகர் மகன் அருண்பாண்டியன் (22) மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என மூவரும் சேர்ந்து மகாமணியை தரக்குறைவாக பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மகாமணி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மற்ற இருவரையும் தேடி வருகிறார்.