செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

Published On 2016-12-14 22:14 IST   |   Update On 2016-12-14 22:14:00 IST
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது.
மீன்சுருட்டி:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை பிரகதீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதையடுத்து திருப்பனந்தாள் காசி மடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, அதன்பின் பக்தர்கள் குருக்கள் தெரு, கணக்கவிநாயகர் கோவில் வழியாக கிரிவலம் சென்று மீண்டும் கோவிலின் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

பின்னர் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த கிரிவலத்தில், ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கிரிவலத்துக்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News