செய்திகள்

தா.பழூர் அருகே கோவில் பொருட்களை திருடிய 3 பேர் கைது

Published On 2016-12-11 21:04 IST   |   Update On 2016-12-11 21:04:00 IST
தா.பழூர் அருகே கோவில் பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த அணைக்குடம் கடைவீதியில் வீரானார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த சூலம், மணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி கொண்டிருந்தனர்.

அப்போது சத்தம் கேட்டு கோவில் பூசாரி ஆசைத்தம்பி எழுந்து வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஆசைத்தம்பி புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தா.பழூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழமாதேவி கிராமத்தில் கண்டமங்கலத்தை சேர்ந்த வீராசாமி (வயது 36), சிலம்பரசன் (22), பாலசங்கர் (31) ஆகியோர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் பொருட்களை திருடிய வீராசாமி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கோவிலில் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News