மீன்சுருட்டி அருகே பதுக்கிவைத்து மது விற்ற 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
மீன்சுருட்டி போலீசார் நேற்று இரவு ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அறந்தாங்கி பஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்ததில் காடுவெட்டி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மாசிலாமணி (வயது33) என்பதும், இவர் பதுக்கிவைத்து வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்துகொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் காடுவெட்டி பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள 8 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மாசிலாமணி, மணிகண்டன் இருவரையும் மீன்சுருட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.