செய்திகள்

வாட்ஸ் அப்பில் ஜெயலலிதா பற்றி அவதூறு: அரியலூர் தி.மு.க. பிரமுகர் கைது

Published On 2016-12-08 19:05 IST   |   Update On 2016-12-08 19:05:00 IST
வாட்ஸ்அப்பில் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பிய தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்களில் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அரியலூர்:

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி இறந்தார். அவரது மறைவிற்கு அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரியலூர் பகுதி வாட்ஸ்அப்பில் ஜெயலலிதா பற்றி பலரது செல்போன்களுக்கு அவதூறான வார்த்தைகள் பரப்பப்பட்டது. அதில் உங்களை அடிமையாக நடத்திய முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார்.

எனவே இனி வரும் காலங்களிலாவது... என்று கூறி தொடர்ந்து வார்த்தைகள் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அரியலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் அரியலூர் போலீசில் புகார் செய்தார். வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அரியலூர் வீணைக்கைகாட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் (வயது 39) என்பது தெரியவந்தது. தி.மு.க. ஒன்றிய குழு பொறுப்புக்குழு உறுப்பினரான செல்வேந்திரன் ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.

அவரை கைது செய்த போலீசார் நேற்று இரவு அரியலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மகாலெட்சுமி செல்வேந்திரனை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Similar News