செய்திகள்

விக்கிரமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2016-12-07 07:07 GMT   |   Update On 2016-12-07 07:07 GMT
விக்கிரமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:

விக்கிரமங்கலம் அருகேயுள்ள நாகமங்கலம் கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சரத்குமார் (23). இவர் நேற்று அவரது தம்பி அருண்பாண்டியன் (17) என்பவரை பைக்கின் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு சந்திரபாளையம் பிரிவு ரோடு அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக்கின் மீது மோதியதில் பின்னால் உட்கார்ந்து வந்த அருண்பாண்டியன் மீது பஸ்சின் முன்பக்க டயர் ஏரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து சரத்குமார் விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்கு பதிந்து பஸ்சை ஓட்டிவந்த நரியங்குழி கிராமம் வடக்குத் தெருவைச்சேர்ந்த முருகையன் மகன் உலக நாதன் (35) என்பவரை விசாரித்து வருகின்றார்.

Similar News