செய்திகள்

அரியலூரில் நகராட்சி நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

Published On 2016-11-28 19:40 IST   |   Update On 2016-11-28 19:40:00 IST
அரியலூர் நகராட்சி நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்

அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தே.மு.தி.க. சார்பில் அரியலூர் செட்டிஏரி பூங்காவை பொதுமக்களுக்கு கட்டணமில்லாத பூங்காவாக மாற்ற கோரியும், அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச பொது கழிவறை கட்டிடம் கட்டவும், அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கவும், அரியலூர் நகராட்சியில் 18வார்டுகளில் முறையாக கொசு மருந்து அடிக்காமலும், சாலை வசதி செய்து கொடுக்காமலும், பாதுகாப்பான குடிநீர் வசதி செய்து கொடுக்காமலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பூட்டி கிடப்பதை கண்டித்தும்,

அரியலூர் நகரில் ஆமை வேகத்தில் நகர்த்தப்படும் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறுவதை கண்டித்தும், சாலை வசதி செய்து கொடுக்காமல் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தையும் நெடுஞ்சாலை துறை நிர்வாகத்தையும் கண்டித்து அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Similar News