செய்திகள்

பெருந்துறையில் கணவருடன் ரோட்டில் நடந்து சென்ற பெண் விபத்தில் பலி

Published On 2016-11-02 17:17 IST   |   Update On 2016-11-02 17:17:00 IST
பெருந்துறையில் கணவருடன் ரோட்டில் நடந்து சென்ற பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெருந்துறை:

வெள்ளி திருப்பூர் அருகே உள்ள மலையப்பாறை காடு என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி.தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி (வயது 33). இவர்களுக்கு ரவிந்திரகுமார் (11) என்ற மகனும், மகா ஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர்.

இவர்களது உறவினர் ஒருவர் பெருந்துறை தென்றல் நகரில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக கணவன்-மனைவி இருவரும் பஸ்சில் வந்தனர்.

பெருந்துறை போலீஸ் நிலையம் அருகே பஸ்சில் வந்து இறங்கிய அவர்கள் தென்றல் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றனர்.

அரசு ஆஸ்பத்திரி அருகே அவர்கள் சென்ற போது அந்த வழியாக சென்ற ஒரு மொபட் அன்னக்கொடி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தனது கண் எதிரே தனது மனைவி விபத்தில் அடிபட்டதை பார்த்த பழனிச்சாமி அதிர்ச்சியடைந்து கதறி துடித்தார்.

பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பழனிச்சாமி தனது மனைவி அன்னக்கொடியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அன்னக்கொடி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News