செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் இன்றும் ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வானம் மூடியபடி இருட்டாகவே காணப்பட்டது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பலமாக பெய்யாவிட்டாலும் பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
அதேபோல் நேற்று 2-வது நாளாகவும் கனமழை பெய்யாவிட்டாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சென்னிமலை, ஒரத்துப்பாளையம், பவானி, சத்தியமங்கலம் மற்றும் ஆப்பக்ககூடல் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.
இதில் ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வெள்ளாள பாளையம், கூத்தம்பூண்டி, மூங்கில்பட்டி, கீழ்வாணி, அத்தாணி ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 11.45மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் கொட்டியது.
இதனால் அப்பகுதி ரோட்டில் மழை தண்ணீர் பாய்ந்து ஓடியது. குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இன்றும் ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வானம் மூடியபடி இருட்டாகவே காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் மழை பெய்யாவிட்டாலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது பலத்த மழை பெய்யும்., குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பலமாக பெய்யாவிட்டாலும் பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.
அதேபோல் நேற்று 2-வது நாளாகவும் கனமழை பெய்யாவிட்டாலும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சென்னிமலை, ஒரத்துப்பாளையம், பவானி, சத்தியமங்கலம் மற்றும் ஆப்பக்ககூடல் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.
இதில் ஆப்பக்கூடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வெள்ளாள பாளையம், கூத்தம்பூண்டி, மூங்கில்பட்டி, கீழ்வாணி, அத்தாணி ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 11.45மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் கொட்டியது.
இதனால் அப்பகுதி ரோட்டில் மழை தண்ணீர் பாய்ந்து ஓடியது. குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இன்றும் ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வானம் மூடியபடி இருட்டாகவே காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் மழை பெய்யாவிட்டாலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது பலத்த மழை பெய்யும்., குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.