செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2016-10-31 15:03 IST   |   Update On 2016-10-31 15:03:00 IST
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஈரோடு:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்திலும் நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் மழை பெய்ய தொடங்கி இருப்பதையொட்டி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கோபி, கொடிவேரி அணைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம், தாளவாடி, சென்னிமலை, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.

மேகக்கூட்டம் திரண்டிருந்ததை பார்த்தால் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழையுடன் நின்றுவிட்டது.

ஈரோட்டிலும் கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்தாலும் மழை பெய்யவில்லை. ஈரோடு மாவட்டத்தில் இன்றும் வானம் மூடியபடி இருந்தது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

Similar News