மயிலாடுதுறை அரசு ஊழியர் சங்கத்தினர் நிலுவை தொகை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் பி.விஜயன், செயலாளர் குருபிரசாத் ஆகியோர் தலைமை தாங்கினர். முதலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் ஊதியமாற்றம் செய்யப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் தமிழக அரசு அதனை நிறைவேற்றவில்லை.
1.7.2016ல் வரவேண்டிய அகவிலைப்படி உயர் 3 மாதங்களாகியும் இன்னும் அறிவிக்கவில்லை. 28-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்த கருவூலதுறை கணக்கு அதிகாரியை கண்டித்தும். தமிழக அரசு 125 சதவீத அகவிலைப்படியை 20 சதவீதம் இடைக்கால நிவாரணமாக உடனே வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.