செய்திகள்

நாகை அருகே கார் மோதி 2 பேர் பலி

Published On 2016-10-21 15:01 IST   |   Update On 2016-10-21 15:01:00 IST
நாகை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

நாகப்பட்டினம்:

நாகை அருகே உள்ள நாச்சிகுளத்தை சேர்ந்த ராபர்ட் அடைக்கலராஜ் என்பவர் மகன் ஆரோக்கியராஜ் (வயது 30) இவரும், கோவிந்தகாட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் கணேஷ் (25) என்பவரும் நேற்று இரவு 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நாச்சிகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்றனர். அவர்கள் பரவை அருகே தனியார் மசாலா நிறுவனம் அருகே வந்தபோது அந்தவழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கியராஜூம், கணேசும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News