செய்திகள்

வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

Published On 2016-10-17 17:29 IST   |   Update On 2016-10-17 17:29:00 IST
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தோப்புத்துறை மகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரெத்தினம்பிள்ளை (வயது 78). இவர் கடந்த 15-ந்தேதி இரவு வேதாரண்யம்-நாகை சாலை பாலமுருகன் கோவில் அருகே நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த தோப்புத்துறை அர்ஜூனன் மகன் மணிகண்டன் (26) என்பவர் மீது வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News