செய்திகள்

நாகூரில் டெய்லர் தற்கொலை

Published On 2016-10-17 15:36 IST   |   Update On 2016-10-17 15:36:00 IST
நாகூரில் டெய்லர் மது குடிப்பதை நிறுத்த சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதில் குணமாகாததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்:

நாகூர், முட்டம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 42) டெய்லர். இவரது மனைவி லதா (38) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ரவி மது குடிப்பதை நிறுத்த சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதில் குணமாகாததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாப மாக இறந்தார்.

இது குறித்து நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News