செய்திகள்
காரைக்குடி அருகே அரசு பஸ் மோதி பிளஸ்-1 மாணவன் பலி
அரசு பஸ் மோதியதில் பிளஸ்-1 மாணவன் பலியானான்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது செட்டிநாடு கூட்டுக் கொல்லை. இந்த பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், அரசு கால்நடை பண்ணை வாகன ஓட்டுனர்.
இவரது மகன் வசந்தகுமார் என்ற காளிமுத்து (வயது15). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாணவன் வசந்த குமார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அவர் ஒரு திருப்பத்தில் சென்ற போது திருச்சியில் இருந்து பரமக்குடி நோக்கி அரசு பஸ் வந்தது.
அந்த பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காளிமுத்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து செட்டிநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.