செய்திகள்
திருப்புவனத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ.1¼ லட்சம்-4 பவுன் அபேஸ்
திருப்புவனத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகையை மர்ம மனிதர்கள் அபேஸ் செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது45). இவர் வங்கிக்கு சென்று ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் எடுத்துள்ளார்.
அதனுடன் 4 பவுன் தங்க நகையையும், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துள்ளார். வீட்டிற்கு பணம் மற்றும் நகையுடன் புறப்பட்ட பாலசுப்பிரமணியன், வழியில் லேத் பட்டறை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது நகை மற்றும் பணம் அடங்கிய பையை எடுக்க மறந்துவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த அவர், பணப்பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் வங்கியில் இருந்து பணம் எடுத்து வைத்ததை யாரோ மர்ம மனிதர்கள் நோட்டமிட்டு அபேஸ் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனம் போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப் பதிவு செய்து 4 பவுன் மற்றும் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம மனிதர்களை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது45). இவர் வங்கிக்கு சென்று ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் எடுத்துள்ளார்.
அதனுடன் 4 பவுன் தங்க நகையையும், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துள்ளார். வீட்டிற்கு பணம் மற்றும் நகையுடன் புறப்பட்ட பாலசுப்பிரமணியன், வழியில் லேத் பட்டறை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது நகை மற்றும் பணம் அடங்கிய பையை எடுக்க மறந்துவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த அவர், பணப்பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் வங்கியில் இருந்து பணம் எடுத்து வைத்ததை யாரோ மர்ம மனிதர்கள் நோட்டமிட்டு அபேஸ் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனம் போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப் பதிவு செய்து 4 பவுன் மற்றும் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம மனிதர்களை தேடி வருகிறார்.