செய்திகள்

கல்லல் அருகே மின்சாரம் தாக்கி இலங்கை அகதி பலி

Published On 2016-10-07 13:49 IST   |   Update On 2016-10-07 13:49:00 IST
கல்லல் அருகே மின்சாரம் தாக்கி இலங்கை அகதி இறந்தார்.

சிவகங்கை:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது32). பெயிண்டரான இவர் நேற்று கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த மின்வயர் எதிர் பாராத விதமாக அவர் உடலில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News