செய்திகள்

திருப்பத்தூர் அருகே 3 மாத குழந்தையுடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

Published On 2016-10-07 13:33 IST   |   Update On 2016-10-07 13:33:00 IST
திருப்பத்தூர் அருகே 3 மாத குழந்தையுடன் இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரிய மருதுபட்டியை சேர்ந்தவர் மதிகுமார் (வயது 23). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா (21). இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தைக்கு தடுப்பூசி போட சென்ற கவிதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த மதிகுமார், தனது மனைவி-மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News