செய்திகள்

சிவகங்கையில் தாய்-மகன் மீது தாக்குதல்: 2 பேர் கைது

Published On 2016-10-06 14:54 IST   |   Update On 2016-10-06 14:54:00 IST
சிவகங்கையில் தாய்-மகனை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:

சிவகங்கை நகர் அருகே உள்ள வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது40), இவர் தனது இடத்தில் வளர்ந்த கருவேலமரங்களை, ஆட்களை வைத்து வெட்டி எடுக்க முயன்றார்.

அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள் தங்கம், தீர்த்தகுமார், அழகுபாண்டி, நாராயணன், கருப்பையா, சசிகலா ஆகியோர் தடுத்தனர். இது எங்கள் இடம் என அவர்கள் கூறியதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், லட்சுமி சரமாரியாக தாக்கப்பட்டார். தாக்குதலை தடுக்க வந்த அவரது மகன் அண்ணாத்துரைக்கும் அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்த அண்ணாத்துரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மோதல் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசில் லட்சுமி புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் நாராயணன், சசிகலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News