செய்திகள்

தேவகோட்டையில் நாட்டு வெடிகள் பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2016-10-06 06:27 GMT   |   Update On 2016-10-06 06:27 GMT
தேவகோட்டை பகுதியில் நாட்டு வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
தேவகோட்டை:

தேவகோட்டை பகுதியில் அனுமதியின்றி நாட்டு வெடிபொருட்கள், பட்டாசுகள் வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் தேவகோட்டை டவுன் போலீசார் வெள்ளையன் ஊருணி, தென்கரையில் சோதனை நடத்தினர்.

அப்போது வரதராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் அனுமதியின்றி 29 கிலோ நாட்டு வெடிகள், 290 கிலோ பட்டாசுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோல் திருப்பத்தூர் சாலையில் உள்ள ஆரோக்கியராஜ் என்பவரது கடையில் அனுமதியின்றி 1000 வாணவேடிக்கை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வரதராஜன், ஆரோக்கியராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News