செய்திகள்
திருப்புவனத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
திருப்புவனத்தில் பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
திருப்புவனம் நாடார் பேட்டையை சேர்ந்தவர் மூக்கன் (வயது45). இவரது மகள் அழகுமீனாள் (19). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பல பாடங்களில் ‘அரியர்’ இருந்ததாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அழகு மீனாள் மனவேதனை அடைந்தார்.
வீட்டில் தனியாக இருந்த அவர், வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மூக்கன் கொடுத்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்புவனம் நாடார் பேட்டையை சேர்ந்தவர் மூக்கன் (வயது45). இவரது மகள் அழகுமீனாள் (19). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு பல பாடங்களில் ‘அரியர்’ இருந்ததாக தெரிகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அழகு மீனாள் மனவேதனை அடைந்தார்.
வீட்டில் தனியாக இருந்த அவர், வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மூக்கன் கொடுத்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.