செய்திகள்

வேதாரண்யத்தில் கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2016-10-01 15:22 IST   |   Update On 2016-10-01 15:22:00 IST
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம், அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் ரோஜா (22). இவர் வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரே சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (27) என்பவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு கல்லூரிக்கு செல்ல வந்த ரோஜாவை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தரக்குறைவாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரோஜா வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சக்திவேல் (27) என்பவரை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

Similar News