செய்திகள்

வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது

Published On 2016-10-01 14:52 IST   |   Update On 2016-10-01 14:52:00 IST
வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் ஆயக்காரன்புலம் 2-ம்சேத்தி பாப்புரெட்டிகுத்தகை பகுதியை சேர்ந்தவர் விஜயன். விவசாயி. இவரது மகள் சந்திரா (வயது22).

சந்திராவின் பெற்றோர் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்று விட்டனர். சந்திரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் 3 மணியளவில் அதே தெருவை சேர்ந்த கணபதி மகன் கண்ணன்(30), முருகையன் மகன் விஜயகுமார்(31) ஆகிய 2 பேரும் விஜயனின் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சந்திராவை மிரட்டி கற்பழித்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்ததை கூறி சந்திரா கதறி அழுதுள்ளார். பின்னர் இதுபற்றி வாய்மேடு போலீசில் சந்திரா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குப்பதிவு செய்து சந்திராவை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த கண்ணன், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News