செய்திகள்

வேதாரண்யத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது

Published On 2016-09-30 19:28 IST   |   Update On 2016-09-30 19:28:00 IST
வேதாரண்யத்தில் குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் கீழஆறுமுககட்டளை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 34). இவரது மனைவி ராதா (23).

ராதாவின் அக்காள் கலைமணி, அவரது கணவர் வேதமூர்த்தி ஆகியோருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் தனிக்குடித்தனம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த சக்திவேல் அவர்கள் தனிக்குடித்தனம் போக நீதான் காரணம் என்று கூறி மனைவியை கட்டையால் தாக்கி உள்ளார். இதற்கு சக்திவேலின் அண்ணன் சந்திரசேகரன், ராதாவின் மாமியார் வேதவள்ளி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது குறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி, சக்திவேல், சந்திரசேகரன், வேதவள்ளி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, ராதாவின் கணவர் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News