செய்திகள்

நாகூர் அருகே சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலி

Published On 2016-09-30 12:36 GMT   |   Update On 2016-09-30 12:36 GMT
நாகூர் அருகே சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலியானார். இது பற்றி நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன்(வயது 50) கொத்தனார். இவர் நாகூர் பட்டினச்சேரியில் உள்ள முல்லையம்மாள் என்பவர் வீட்டில் கட்டிடவேலை செய்த போது சுவர் இடிந்து சவுந்திரராஜன் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News