செய்திகள்
ஈரோட்டில் வேலை கேட்டு வந்த ஆந்திரா பெண்ணை விபசாரத்தில் தள்ளிய 2 பேர் கைது
வேலை கேட்டு வந்த ஆந்திரா பெண்ணை விபசாரத்தில் தள்ளிய ஈரோடு பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு ரெங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). இவர் ஈரோடு சோலார் வசந்த நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் என்கிற பிரான்சிஸ் அவரிடம் நைசாக அணுகி பேச்சு கொடுத்தார்.
என்னிடம் வெளிமாநில அழகி உள்ளாள். ரூ.1000 கொடுத்தால் அவருடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினாராம். பிறகு தங்கராஜை செல்வி என்ற பெண் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு நிஷா என்ற ஆந்திர மாநில இளம்பெண் இருந்தார்.
இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூரம்பட்டி போலீசார் செல்வி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த செல்வி மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட ஆந்திர அழகி நிஷா கூறும்போது, “வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறி அழைத்து வந்து இப்படி விபசாரத்தில் தள்ளி உள்ளார்கள்.” என்று கூறினார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு ரெங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). இவர் ஈரோடு சோலார் வசந்த நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் என்கிற பிரான்சிஸ் அவரிடம் நைசாக அணுகி பேச்சு கொடுத்தார்.
என்னிடம் வெளிமாநில அழகி உள்ளாள். ரூ.1000 கொடுத்தால் அவருடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினாராம். பிறகு தங்கராஜை செல்வி என்ற பெண் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு நிஷா என்ற ஆந்திர மாநில இளம்பெண் இருந்தார்.
இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூரம்பட்டி போலீசார் செல்வி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த செல்வி மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட ஆந்திர அழகி நிஷா கூறும்போது, “வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறி அழைத்து வந்து இப்படி விபசாரத்தில் தள்ளி உள்ளார்கள்.” என்று கூறினார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.