செய்திகள்
வேதாரண்யம் அருகே ஒருதலைக் காதலில் பெண்ணுக்கு தொல்லை: வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே ஒருதலைக் காதலில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜா (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த பேபி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் ராஜா தோப்புத்துறையில் வசிக்கும் தனது மாமன் சேகர் என்பவர் மகள் நந்தினி (17) என்பவரை திருமணம் செய்ய விரும்பி ஒருதலைக்காதலில் அவருக்கு கடிதம் எழுதியதுடன் போனில் பேசியும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார்.
வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜா (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த பேபி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் ராஜா தோப்புத்துறையில் வசிக்கும் தனது மாமன் சேகர் என்பவர் மகள் நந்தினி (17) என்பவரை திருமணம் செய்ய விரும்பி ஒருதலைக்காதலில் அவருக்கு கடிதம் எழுதியதுடன் போனில் பேசியும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார்.