செய்திகள்
சீர்காழியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
சீர்காழியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி கடவாசல் மேல தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தாண்டவன் குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த விஜயபாஸ்கர்(21) வந்தார்.
சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் மோட்டார் சைக்கிளை அவர் தான் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
விஜயபாஸ்கர் மீது வேறு ஏதாவது திருட்டு வழக்கு உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.