செய்திகள்

வேதாரண்யத்தில் இளம் பெண்ணுடன் வாலிபர் மாயம்: போலீசில் புகார்

Published On 2016-09-15 16:27 IST   |   Update On 2016-09-15 16:27:00 IST
வேதாரண்யத்தில் இளம்பெண்ணுடன் வாலிபர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள். தங்கை முறை கொண்ட பெண்ணுடன் வாலிபர் மாயமானது வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் புதுத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி (வயது 32). இவர் பல்லடத்தில் உள்ள தனது சித்தப்பா ராஜேந்திரன் வீட்டில் தங்கி வெல்டிங் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கார்த்தி வேதாரண்யம் வந்தார். அப்போது வீட்டில் சொத்து பிரச்சிணை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 11-ந் தேதி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவுக்கு கார்த்தி மோட்டார் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் தனது சித்தப்பா மகள் சரண்யாவையும் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாயமான 2 பேரையும் பல இடங்களில் தேடினர். அப்போது கார்த்தி சென்ற மோட்டார் சைக்கிள் நாகையில் உள்ள ஒரு வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. கார்த்தி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சரண்யாவை அழைத்துக்கொண்டு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து 2 பேரும் மாயமானது குறித்து கார்த்தியின் அண்ணன் அசோக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்கள். தங்கை முறை கொண்ட பெண்ணுடன் வாலிபர் மாயமானது வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News