செய்திகள்

நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு: 2 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது

Published On 2016-09-15 14:54 IST   |   Update On 2016-09-15 14:55:00 IST
நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:

தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விடக்கோரியும், கர்நாடகத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும் நாளை (16-ந்தேதி) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

விவசாய சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை ஆகியவற்றின் சார்பில் இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரம் மணல் லாரிகளும் ஓடாது என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Similar News