செய்திகள்
ஈரோட்டில் ரெயில் கட்டணத்தை குறைக்க கோரி காங். ஆர்ப்பாட்டம்
ரெயில் கட்டணம் உயர்வை கண்டித்து ஈரோடு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சிறுபாண்மை துறை சார்பில் மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ஈரோடு:
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை உயர்த்த மாட்டோம் என்ற பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதாகவும் மேலும் ரெயில் கட்டணம், விமான கட்டணத்தையை மிஞ்சும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் கே.என்.பாஷா கூறியிருப்பதாவது:-
கடந்த 9-ந் தேதி முதல் ராஜ்தாணி, சதாப்தி தூரர்தே ரெயில்களில் முதலில் 10 சதவீத இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படும். பிறகு அடுத்தடுத்து 10 சதவீதம் உயர்ந்து கொண்டே செல்லும் வகையில் 50 சதவீதம் வரை உயரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி ரெயில் கட்டணத்தில் மத்திய அரசு மோசடி செய்கிறது என்று தான் கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் தினமும் செல்லும் சென்னை, மும்பை, புதுடெல்லி போன்ற ரெயில்களுக்கும் இந்த முறையை அமல்படுத்தி விடுவார்களோ...என்ற அச்சத்தில் ரெயில் பயணிகள் உள்ளனர்.
இந்த விலை உயர்வை கண்டிப்பதுடன் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சிறுபாண்மை துறை சார்பில் மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை உயர்த்த மாட்டோம் என்ற பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதாகவும் மேலும் ரெயில் கட்டணம், விமான கட்டணத்தையை மிஞ்சும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் கே.என்.பாஷா கூறியிருப்பதாவது:-
கடந்த 9-ந் தேதி முதல் ராஜ்தாணி, சதாப்தி தூரர்தே ரெயில்களில் முதலில் 10 சதவீத இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படும். பிறகு அடுத்தடுத்து 10 சதவீதம் உயர்ந்து கொண்டே செல்லும் வகையில் 50 சதவீதம் வரை உயரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி ரெயில் கட்டணத்தில் மத்திய அரசு மோசடி செய்கிறது என்று தான் கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் தினமும் செல்லும் சென்னை, மும்பை, புதுடெல்லி போன்ற ரெயில்களுக்கும் இந்த முறையை அமல்படுத்தி விடுவார்களோ...என்ற அச்சத்தில் ரெயில் பயணிகள் உள்ளனர்.
இந்த விலை உயர்வை கண்டிப்பதுடன் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சிறுபாண்மை துறை சார்பில் மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.