செய்திகள்
காரைக்குடி அருகே மைனர் பெண் கடத்தல்: வாலிபர் மீது புகார்
காரைக்குடி அருகே மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப் பட்டுள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை திருகப்பட்டி பீர்களைக்காடு பகுதியை சேர்ந்த 16 வயது பெண் வீட்டிலிருந்தபோது திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இது குறித்து அந்த பெண்ணின் தந்தை சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை பாண்டித்துரை என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கிறார். அவரிடம் இருந்து மகளை மீட்டு தரும்படி கூறப்பட்டு இருந்தது.
இதன்பேரில் சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணையும், அவரை கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகிறார்.