செய்திகள்

தேவகோட்டை-காரைக்குடியில் நர்சு-இளம்பெண் மாயம்

Published On 2016-09-08 16:55 IST   |   Update On 2016-09-08 16:55:00 IST
நர்சு மற்றும் இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:

தேவகோட்டை நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி மீனாள் (வயது40). இவரது மகள் பிரதீபா (19). நர்சு பயிற்சி முடித்துள்ளார். கடந்த 1-ந்தேதி வேலைக்காக கோவை செல்வதாக கூறி வீட்டில் இருந்து பிரதீபா சென்றுள்ளார். ஆனால் அவர் கோவை சென்று சேரவில்லை. அதே நேரம் வீடும் திரும்பவில்லை.

இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் பாண்டி மீனாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரதீபாவை தேடி வருகிறார்.

திருப்பத்தூர் தாலுகா நாச்சியார்புரம் அருகே உள்ள இளங்குடியை சேர்ந்தவர் பவானி (42). இவரது மகள் புனிதவள்ளி (20). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்ற புனித வள்ளி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நாச்சியார்ரம் போலீசில், பவானி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து மாயமான புனிதவளள்ளியை தேடி வருகிறார்.

Similar News