செய்திகள்

மானாமதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்பதாக கணவன் உள்பட 8 பேர் மீது வழக்கு

Published On 2016-09-08 11:00 GMT   |   Update On 2016-09-08 11:00 GMT
மானாமதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்பதாக பெண் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை:

மானாமதுரை அருகே உள்ள மூங்கில்ஊரணியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கும், திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் 2002-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜான்சிராணி, தாய்வீடு வந்து விட்டார். அதன் பின்னர் அவரை கணவருடன் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் ஜான்சிராணி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், சேர்ந்து வாழ வேண்டும் என்றால், கூடுதல் வரதட்சணை வேண்டும் என கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தம் விசாரணை நடத்தி குமார், அவரது பெற்றோர் பிச்சை -ஜெயா, உறவினர்கள் உஷா, இளமாறன், மீனாள், இளையராஜா, சுபா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Similar News