செய்திகள்

இளையான்குடி அருகே வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2016-09-08 14:52 IST   |   Update On 2016-09-08 14:52:00 IST
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழகுப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை:

இளையான்குடி தாலுகா அதிகாரை பகுதியை சேர்ந்த செல்வி (வயது33) என்பவருக்கும், ராஜ புளியேந்தலை சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 21 பவுன் நகையும், பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாம்.

இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வி புகார் செய்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தி கண்ணதாசன் அவரது தாய் கருப்பாயி, உறவினர் ராதிகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Similar News