செய்திகள்

மானாமதுரையில் இளம்பெண் மாயம்

Published On 2016-09-03 15:06 IST   |   Update On 2016-09-03 15:06:00 IST
மானாமதுரையில் இளம்பெண் மாயமானதாக போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

சிவகங்கை:

மானாமதுரை தாலுகா அரிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகள் விஜய பிரியா (வயது21). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 1-ந்தேதி தோழி களை பார்த்து வருவதாக வீட்டில் இருந்து விஜயபிரியா வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மானாமதுரை போலீ சில் விஜயபிரியாவின் தாய் முத்துச்செல்வி புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பரக்கத் துல்லா வழக்குப்பதிவு செய்து மாயமான விஜய பிரியாவை தேடி வருகிறார்.

Similar News